பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர்
கல்லூரியில் பாடசாலை சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘கெளரவிப்பு விழா’ நிகழ்வு இன்று (16)
புதன்கிழமை பாடசாலை பாக்கிர் மாக்கார் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஜனாபா பஹீமா பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற
உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாகவும் பேருவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜே.யு.சோமரத்ன கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.