தேர்தலை பிற்போடுமாறு எதிரணிகள் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என்றும் தேர்தலை பிற்போடுமாறு நாம் கூறவில்லை என்றும் தேர்தலை பிற்போடும் நோக்கம் யானை- மொட்டு கூட்டணிக்கே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல் ஒத்திவைத்தமை குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தேர்தலை மீளப்பெறுவதே எமது முதல் வெற்றி என்றும் அதன்பின் உள்ளூராட்சி தேர்தலில் பெரும்பாலான மன்றங்களை வெற்றிக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொய்களை கொண்டே ஜனாதிபதி ஆட்சி நடத்துவதாகவும் இவ்வாறு ஆட்சி செய்ய முடியாது என்றும் தனக்கு பஸ் மேன் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் அவ்வாறாயின் பஸ் மேன்,ஹொஸ்பிடல் மேன்,கீபோர்ட் மேன் என்றவாறும் என்னை அழைக்கலாம் என்றும்  அவர் குறிப்பிட்டார்.

வெலிஓயாவில் நேற்று (24) நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.