நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தொடர்பில் எதிரணியின் விஷேட கலந்துரையாடல்
—————————-
நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவும், இளைஞர்களின் அமைதியான போராட்டத்தை வலுப்படுத்தவும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தீர்க்கவும் முன்னோடி கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாரளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க, கரு ஜெயசூரிய, ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, ரிஷாட் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரட்ன, அதாவுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.