பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு மலர்சாலைக்கு சற்றுமுன்னர் வருகைத் தந்த யுவன்.!!

இசைஞானிய இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தனர்.

தற்போது பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.