நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜே.வி.பி.க்கு முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தி பொருளாதார குழுவுடன் விவாததிற்கு வருமாறு சன்திம வீரக்கொடி அழைப்பு விடுத்தார்.

அநுர குமாரவும் அமைச்சு பதவி வகித்துள்ளார். சஜித் பிரேமதாசவும் அமைச்சு பதவி மாத்திரமே வகித்துள்ளார். ஆனால் மக்கள் சேவை செய்தது யார் என்று மக்களுக்கு தெரியும். 1000 குளங்களை நிர்மாணிப்பதாக அநுர கூறினார்.ஆனால் அமைத்த குளங்கள் எதுவும் இல்லை.

ஜே.வி.பி.யிடம் பொருளாதார திட்டங்கள் இல்லை. ஆகவே முடியுமானால் விவாதத்திற்கு வாருங்கள் என்றார்.

இன்று (2) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.