வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியையும் உடனடியாக குறைக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடன்களுக்கான வட்டி வீதத்தினை குறைக்காதமை தொடர்பில் நிறுவனங்களிடம் மத்திய வங்கி காரண விளக்கம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் பெறப்படும் கடன்களின் வட்டி வீதம் மட்டுமின்றி ஏற்கனவே பெறப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை குறைக்குமாறு வங்கிகளுக்குத் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.