எரிபொருள் விலையேற்றம் மற்றும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்ந போராட்டத்தை கண்டி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களின்
தலைமையில்

புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கட்டுகஸ்தோட்டை மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த போராட்டத்திற்கு முன்னாள் சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.