மக்கள் விரோத அரசாங்கத்தின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (03) சுதந்திர சதுக்கத்திற்கு முன்னால் அமைதியான முறையில் நடைபெற ஏற்ப்பாடாக இருந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண்கள் தடைகளை ஏற்ப்படுத்தி பலத்த பாதுகாப்பு படைபிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,
பாதுகாப்புத்
துறையினருக்கும் இடையே இதன் போது கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.