யாரிடமும் அடிவாங்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன் என்றும் அதற்கு பதிலாக அடித்துவிட்டு சிறைக்கு செல்வேன். அடிவாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

புத்தளம் தலுவ பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றை திறந்து வைக்கச் சென்ற போது மக்களின் எதிர்ப்பு ஏற்பட்டமையால் இடைநடுவே திரும்பி வந்தமை தொடர்பில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.