ஜனாதிபதி ரணில் தியவன்னாவ பாராளுமன்றத்தில் இருந்து புதுக்கடை உயர்நீதிமன்றத்திற்கு மிசைல் தாக்குதல் நடத்துவதாகவும் ரணில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாகவும் ஜனாதிபதியின் மிசைல் புதுக்கடைக்கு விழுவதற்கு விடமாட்டோம் என கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தலுக்கு நாம் அஞ்சமாட்டோம் என மொனாராகலை கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.அப்படியாயின் நாங்களா தேர்தலை பிற்போட முனைகின்றோம் என கேள்விஎழுப்பிய முஜிபுர், தேர்தலுக்கு அச்சமில்லை எனில் மொனாராகலைக்கு சென்று மக்களிடம் கூற தேவையில்லை என்றும் தனது அருகிலுள்ள நண்பன் ரணிலிடம் கூறுமாறும் மக்கள் மத்தியில் பொய் கூறி மீண்டும் ஏமாற்ற வேண்டாம் என்றும் வயதான காலத்தில் பேரன் பேத்தியுடன் விளையாடுமாறும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (13) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.