சபாநாயகரின் பக்கச்சார்பான நடத்தை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் குற்றச்சாட்டு.

சபாநாயகர் அனைவருக்குமான சபாநாயகராக செயற்பட வேண்டும் என்றாலும்,இன்றைய தினம் சபாநாயகர் மிகவும் பக்கச்சார்பாகவும் ஜனநாயக விரோதமாகவும் செயற்பட்டுள்ளார் எனவும், அவரது இந்த நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அவர் செயற்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவரது இந்த நடத்தைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-